அந்த நாள்

 அல்லி மலரும் வேளையிலே

அழகாய் நீ கண் சிமிட்டுகிறாய்

ஆலம் விழுதை அறுத்து-நீ

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

வானமழையாய் நீ வந்தால்

வண்ண மயிலாய் நான் களிப்பேன்-உன்

இமையில் விழுந்த இளைஞன் நான்

இமயத்தின் உயரம் சிறியதடி

உன்னை நினைத்தே 

என்னிரவு மெல்லமெல்ல நகருதடி

உன்னை காணா நாட்களிலே

என்னை தொலைத்து தேடுகிறேன்

நீ பார்க்காத வேளையிலே

உனை பார்த்து இரசிக்கின்றேன்

                  -ராம் 

Comments

Popular posts from this blog

அவள்