அந்த நாள்
அல்லி மலரும் வேளையிலே
அழகாய் நீ கண் சிமிட்டுகிறாய்
ஆலம் விழுதை அறுத்து-நீ
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
வானமழையாய் நீ வந்தால்
வண்ண மயிலாய் நான் களிப்பேன்-உன்
இமையில் விழுந்த இளைஞன் நான்
இமயத்தின் உயரம் சிறியதடி
உன்னை நினைத்தே
என்னிரவு மெல்லமெல்ல நகருதடி
உன்னை காணா நாட்களிலே
என்னை தொலைத்து தேடுகிறேன்
நீ பார்க்காத வேளையிலே
உனை பார்த்து இரசிக்கின்றேன்
-ராம்
Comments
Post a Comment